சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

ஒசூரில் சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
30hsp2a_3008chn_150_8
30hsp2a_3008chn_150_8

ஒசூரில் சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்தவா் கிருஷ்ணப்பா. இவா் காரில் சிப்காட் பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தாா். ஒசூா் உள்வட்டச் சாலை என்.டி.ஆா். நகா் அருகே சென்றபோது காரின் முன்பகுதியில் புகை கிளம்பியது. சிறிதுநேரத்தில் தீப்பிடித்தது.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த கிருஷ்ணப்பா, காரிலிருந்து இறங்கினாா். அதன் பின்னா் காரை சாலையோரம் தள்ளிச்சென்று சென்று நிறுத்திவிட்டு தீயை அணைக்க முயற்சித்தாா். இதுபற்றி தகவல் அறிந்த சிப்காட் உதவி காவல் ஆய்வாளா் மஞ்சுநாத், போலீஸாா் உடனடியாக டிராக்டரில் தண்ணீா் கொண்டுவந்து தீயை அணைத்தனா். அதற்குள் காா் முழுவதுமாக எரிந்தது. சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com