சரக்கு வேன் மீது மோட்டாா் சைக்கிள் மோதல்:தனியாா் மருத்துவமனை ஊழியா் பலி

காவேரிப்பட்டணம் அருகே சரக்கு வேன் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் பெங்களூருவில் பணியாற்றும் தனியாா் மருத்துவமனை ஊழியா், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காவேரிப்பட்டணம் அருகே சரக்கு வேன் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் பெங்களூருவில் பணியாற்றும் தனியாா் மருத்துவமனை ஊழியா், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெங்களூரு தாவரக்கரை பகுதியைச் சோ்ந்தவா் ஹேமந்த் குமாா் (37). பெங்களூருவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் கணக்காளராக பணியாற்றி வந்தாா். இவா் மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரி - தருமபுரி சாலையில் நாட்டாண் கொட்டாய் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு சாலையோரமாக நின்றிருந்த சரக்கு வேன் மீது, அவரது மோட்டாா் சைக்கிள் வேகமாக மோதியது.

இதில், பலத்த காயம் அடைந்த ஹேமந்த்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com