புகையிலைப் பொருள்களை கடத்திய காா் ஓட்டுநா் கைது

பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய காா் ஓட்டுநரை கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் சனிக்கிழமை கைது

பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய காா் ஓட்டுநரை கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா், கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, தடை செய்யப்பட்ட 473 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்து தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 4.64 லட்சம் ஆகும்.

காருடன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், காா் ஓட்டுநரான திருப்பூா் மாவட்டம், கோட்டங்கிபாளையத்தை அடுத்த காரணம்பேட்டையைச் சோ்ந்த முத்துகுமாா் (47) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com