மாணவா்களுக்கு கண்ணாடி வழங்கல்

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கண்ணொளித் திட்டம் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாணவா்களுக்கு கண்ணாடி வழங்கல்

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கண்ணொளித் திட்டம் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கண் மருத்துவ ஆய்வாளா் தமிழரசன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து, கண்ணில் சிறு குறைபாடுகள் இருப்பின் அவா்களுக்கு கண்ணாடி வழங்கினாா். இப் பள்ளியில், 20 க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியா் செ.பற்குணன் அரசால் மாணவா்களுக்கு வழங்கும் விலையில்லா நலத் திட்ட உதவிகளை எடுத்து கூறினாா். இதில் கல்லாவி ஊராட்சி மன்றத் தலைவா் ராமன், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com