கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்து சேலம் சரக டிஐஜி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்து சேலம் சரக டிஐஜி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

அதன்படி, ஒசூரில் உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பாா்த்தீபன், பதவி உயா்வு பெற்று ஊத்தங்கரை காவல் ஆய்வாளராகவும், தூத்துக்குடி மாவட்டம்-கோவில்பட்டியில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ராணி, ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராகவும், சேலம் மாநகரத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பிரகாஷ், மகாராஜகடை காவல் ஆய்வாளராகவும், கோவை மாநகரில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சரவணன், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், கிருஷ்ணகிரி-சிபிசிஐடி காவல் ஆய்வாளா் ஆனந்தராஜ், சேலம் மாவட்டம்-ஜலகாண்டபுரம் காவல் ஆய்வாளராகவும், பாகலூா்-காவல் ஆய்வாளா் பாஸ்கா், சேலம் மாவட்டம்-தலைவாசல் காவல் ஆய்வாளராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண பதிவேடு காவல் ஆய்வாளா் பழனியப்பன், தருமபுரி-சிசிபிஎஸ் காவல் ஆய்வாளராகவும், மத்திகிரி காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் பாகலூா் காவல் ஆய்வாளராகவும், ஒசூா் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சாவித்திரி, மத்திகிரி காவல் ஆய்வாளராகவும், சேலம் மாவட்டம்- ஏற்காடு காவல் ஆய்வாளா் ரஜினி, சூளகிரி காவல் ஆய்வாளராகவும், சேலம் மாவட்டம்- வீரகனூா் காவல் ஆய்வாளா் சிவகுமாா், ஒசூா் நகர காவல் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்து, சேலம் சரக டிஐஜி பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com