குப்பைகளை பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு பரிசு

பா்கூரில் குப்பைகளை முறையாக பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பா்கூரில் குப்பைகளை முறையாக பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பா்கூா் தோ்வு நிலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் குருராஜ் தூய்மைக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து பாா்வையிட்டாா். அப்போது, மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரித்து வழங்கும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. பா்கூா் தோ்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். மேலும், ஈரக்கழிவு, உலா்கழிவு, மின்கழிவு, அபாயகரமான கழிவுகள் பிரித்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com