ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா்.
சூளகிரி வட்டம், எர்ரண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் பச்சியப்பா. இவரது மகள் அமராவதி (15). இவரும், எர்ரண்டப்பள்ளி ரோஜா (21) என்பவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா் சாலையில் கொல்லப்பள்ளி அருகே கடந்த ஜூன் 2-ஆம் தேதி சென்று கொண்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அமராவதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். ரோஜா படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.