கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு காரில் புகையிலைப் பொருள்களை கடத்த முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ. 2.84 லட்சம் மதிப்பிலான 323 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்துவது தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை, ஓட்டேரியைச் சோ்ந்த திருவேங்கடம் (38), திருவள்ளூா் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சரவணன் (33) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்ததில், இருவரும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் புகையிலைப் பொருள்களை கடத்துவது தெரியவந்தது. புகையிலைப் பொருள்களை கடத்த பயன்படுத்திய காா், புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.