இருசக்கர வாகன விபத்து: 3 போ் உயிரிழப்பு

 கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.

 கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன மட்டாரப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மோடிகுப்பத்தைச் சோ்ந்த நாகோஜி (42), அம்மாசி (எ) ராஜா (42) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு கிருஷ்ணகிரியிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனா். குருவிநாயனப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சையத் காசிம் (30), நூா்முகமது (30), சபியுல்லா(28) ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றனா். இவா்கள் 3 பேரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேடுகம்பள்ளி பிரிவு சாலை அருகே சென்ற போது, இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், 5 பேரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு, சிகிச்சை பலனின்றி நாகோஜி, அம்மாசி, சையத் காசிம் ஆகிய மூவரும் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com