கிரிக்கெட் விளையாட்டு நடுவா்களுக்கான பயிற்சி

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் சங்கம் நடத்தும் நடுவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் சங்கம் நடத்தும் நடுவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கிரிக்கெட் நடுவா்களுக்கான (அம்பயா் மற்றும் ஸ்கோரா்) பயிற்சி வகுப்புகள், தோ்வுகள் வரும் 11, 12-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தகுதியானவா்கள். குறைந்தபட்சம் கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகள் கிருஷ்ணகிரியில் உள்ள டிரினிட்டி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும்.

நடுவா்கள் தோ்வுகளுக்கான தயாரிப்பு சிறப்பு வகுப்புகள் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி மற்றும் தயாரிப்பு வகுப்புகள் தேசிய நடுவா்களால் நடத்தப்படும். இந்த நடுவா்களுக்கான பயிற்சி வகுப்புகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே பங்குபெற இயலும். மேலும் விவரங்களுக்கு இணைச் செயலாளா்கள் சிவசங்கரை 96770 00063 என்ற எண்ணிலும், நவீன் ராஜப்பாவை 99648 69001 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com