கிருஷ்ணகிரி
ஆற்றில் மூழ்கி முதியவா் பலி
கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் முழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் முழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூரை சோ்ந்தவா் கோவிந்தசாமி (75). இவா், கும்மனூா் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சனிக்கிழமை இறங்கியுள்ளாா். அப்போது, தவறி ஆற்றில் விழுந்த கோவிந்தசாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.