கிருஷ்ணகிரி வழியாக சரக்கு வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஒசூா்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அருகே புலியரசு மேடு என்ற பகுதியில் குருபரப்பள்ளி போலீஸாா், வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான 450 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்துவது தெரியவந்தது.
இதுதொடா்பாக, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் வட்டம், நாசரேத்தைச் சோ்ந்த குணசேகா் (36) என்பவரை போலீஸாா், கைது செய்தனா்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கா்நாடக மாநிலத்திலிருந்து வேலூருக்கு புகையிலைப் பொருள்களைக் கடத்துவது தெரியவந்தது.
புகையிலை பொருள்கள், சரக்கு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.