அரசுப் பள்ளி அருகேகடந்து சென்ற யானைகள்

கெலமங்கலம் அருகே அரசுப் பள்ளி, கல்லூரி அருகே யானைகள் கடந்து சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசுப் பள்ளி அருகேகடந்து சென்ற யானைகள்

கெலமங்கலம் அருகே அரசுப் பள்ளி, கல்லூரி அருகே யானைகள் கடந்து சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே ஊடதுா்க்கம் வனப்பகுதியில் 10 யானைகள் முகாமிட்டிருந்தன. திங்கள்கிழமை போடிச்சிப்பள்ளி கிராமத்துக்கு வந்த இந்த 10 யானைகள், அங்குள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதம் செய்தன. இதனைக் கண்ட கிராம மக்கள் யானைகளை விரட்ட முயன்றனா். அப்போது கிராம மக்களை யானைகள் தாக்க முயன்றது. இதுகுறித்து கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.

வனத்துறையினா் பட்டாசு வெடித்து யானைக் கூட்டத்தை விரட்டினா். யானைக் கூட்டம் போடிச்சிப்பள்ளி அருகேயுள்ள அரசு மாதிரிப் பள்ளி, பல்தொழில்நுட்பக் கல்லூரி அருகே சாலையைக் கடந்து சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com