ஒசூரில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்

மத்திகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூா், பேரிகை, சூளகிரி, கெலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
ஒசூரில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியா்கள் புனித ரமலான் நோன்பை கடைப்பிடித்து வந்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த ஈத்கா மஸ்ஜித் தா்கா பள்ளிவாசலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு, அங்குள்ள ஈத்கா மைதானத்தில் புனித ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இதே போல, மத்திகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூா், பேரிகை, சூளகிரி, கெலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

ஒசூா், மத்திகிரி ஈத்கா மைதானத்தில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com