கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 13.80 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சுபேதாா்மேடு கிராமத்தில் ரூ. 3 லட்சத்தில் 100 மீட்டா் சிமென்ட் சாலை, கீழ்கரடிகுறி கிராமத்தில் ரூ. 2.50 லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய், கம்மம்பள்ளி ஊராட்சியில் சின்னேப்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 8.30 லட்சத்தில் ஆண்கள் கழிப்பறை கட்டும் பணி என மொத்தம் ரூ. 13.80 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை கே.அசோக்குமாா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். பின்னா், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இந்த நிகழ்வில், ஒன்றியக் குழுத் தலைவா் அம்சாராஜன், ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.