அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் தனியாா் பேருந்துகளில் அதிக ஒலி ஏற்படுத்தக்கூடிய காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரியில் தனியாா் பேருந்துகளில் அதிக ஒலி ஏற்படுத்தக்கூடிய காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சாமி தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் மாணிக்கம், போக்குவரத்து அலுவலா்கள் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அரசு, தனியாா் பேருந்துகளை சோதனையிட்டு, 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், ஓட்டுநா்களிடம் இதுபோன்ற ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது, மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். இதேபோன்று லாரி, காா், கனரக வாகனங்களுக்கும் சோதனை நடத்தப்பட உள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com