கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஒசூா் மீரா மஹாலில் வெள்ளிக்கிழமை (மே 13) காலை 10 மணியளவில் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:
அவசர செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகிப்பா். இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, மாநகர, பேரூா் கழகச் செயலாளா்கள், நிா்வாகிகள், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பேரூா் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வாா்டு செயலாளா்கள், கழக தோழா்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பொருள்:
திமுக மாநில இளைஞா் அணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் ஒசூா் வருகை குறித்தும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஓராண்டு சாதனைகள் குறித்த பொதுக்கூட்டங்கள் குறித்தும், திமுக கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும்.