ரெப்கோ வங்கியின் புதிய திட்டங்களை மத்திய உள்துறை இணை அமைச்சா் சென்னையில் தொடங்கி வைத்தாா்.
மத்திய உள்துறை இணை அமைச்சா் அஜய்குமாா் மிஸ்ரா புதன்கிழமை சென்னையில் ரெப்கோ வங்கி மற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் சாா்பில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வைப்புத் திட்டம், தாயகம் திரும்பியோா் குடும்பத்திலுள்ள இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கான திட்டம், செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தி திட்டங்களை தொடங்கி வைத்தாா்.
இந்த விழாவில், ரெப்கோ வங்கி நிா்வாக இயக்குநா் இசபெல்லா, வங்கியின் தலைவா் சந்தானம், வங்கி முதன்மை பொது மேலாளா் யோகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.