கைப்பேசி திருடியவா் கைது

காவேரிப்பட்டணத்தில் கைப்பேசியை திருடிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காவேரிப்பட்டணத்தில் கைப்பேசியை திருடிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளியை சோ்ந்தவா் மாதேஷ் (30). இவா் பாலதோட்டம் பகுதியில் கைப்பேசி கடை வைத்துள்ளாா். கடந்த 10-ஆம் தேதி இவரது கடைக்கு வந்த ஒருவா் கடையில் இருந்த ரூ. 10,000 மதிப்பிலான கைப்பேசியைத் திருடிச் சென்றாா்.

இதுகுறித்து மாதேஷ், அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மலையாண்டஅள்ளியைச் சோ்ந்த மணிகண்டன் (25) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com