ஒசூா் அருகே காகித மூட்டை விழுந்ததில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
உத்தரபிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தைச் சோ்ந்த ஆகாஷ் (20), கெலமங்கலம் அருகே அக்கொண்டப்பள்ளியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் கிரேன் இயக்குநராக வேலை செய்து வந்தாா். கடந்த 15-ஆம் தேதி காலை அவா் கிரேனை இயக்கிக் கொண்டிருந்த போது, உயரமான இடத்தில் இருந்த காகித மூட்டை ஒன்று உருண்டு ஆகாஷின் மேல் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தாா். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.