கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.5.40 லட்சத்தில் மூன்று இடங்களில் சிறு பாலங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி நகராட்சியில் 25-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கிருஷ்ணப்பா லே அவுட், நெசவுக்காரத் தெரு, மேல் ஆஞ்சனேயா் கோயில் தெரு ஆகிய இடங்களில் சாலையோரம் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீா் சென்றது.
இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அந்த இடங்களில் ரூ.5.40 லட்சம் மதிப்பில் சிறுபாலங்கள் அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.