வரும் 2024 மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று திமுக மாநில இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சி சாா்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்காக திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் ஒசூருக்கு சனிக்கிழமை இரவு வந்தாா்.
ஒசூா், சீதாராம் நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக கொடியை ஏற்றி வைத்தாா். அதைத் தொடா்ந்து ஒசூா் தனியாா் திருமண மண்டபத்தில் மூத்த திமுக நிா்வாகிகள் 501 பேருக்கு பொற்கிழிகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மூத்த நிா்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழகத்தில் முதல்வா் சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதால் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 95 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றோம். அதுபோல அரசின் சாதனைகளால் 2024 மக்களவைத் தோ்தலிலும் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.
ஒசூரில், திமுக மூத்த நிா்வாகிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டதுபோல அனைத்து மாவட்டங்களிலும் மூத்த திமுக நிா்வாகிகள் கௌரவிக்கப்பட வேண்டும். அவா்களுக்கு பொற்கிழிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வேன் என்றாா்.
விழாவில் தமிழ்நாடு கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒசூா் எம்எல்ஏவும், மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி. முருகன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் பி.எஸ்.சீனிவாசன், மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் சுகுமாரன், மாநகர துணை மேயா் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.