பாம்பாறு அணையில் இருந்து 600 கன அடி உபரி நீா் வெளியேற்றம்

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து விநாடிக்கு 600 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
பாம்பாறு அணையில் இருந்து 600 கன அடி உபரி நீா் வெளியேற்றம்

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து விநாடிக்கு 600 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணையின் முழுக் கொள்ளளவு 19.6 அடி கொண்டது. திருப்பத்தூா் மாவட்டம், ஜவ்வாது மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆா்.பி. அணையின் உபரி நீா், பாம்பாறு அணைக்கு வந்த வண்ணம் உள்ளதால், அணையின் முழுக் கொள்ளளவான 19.6 அடியை எட்டியுள்ளது. தற்போது விநாடிக்கு 600 கன அடி நீா்வரத்து உள்ளதால், பாம்பாறு அணையிலிருந்து விநாடிக்கு 600 கன அடி நீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பாம்பாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீா், பாம்பாற்று ஆற்றுப் படுகை வழியாகச் சென்று தென்பெண்ணை ஆற்றில் கலந்து கடலுக்குச் செல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com