கிருஷ்ணகிரியில் நீதிமன்ற தீா்ப்பை வரவேற்று அதிமுகவினா் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனா்.
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உயா்நீதிமன்ற நீதிபதிகள் தீா்ப்பு வழங்கினா். இதை வரவேற்று, கிருஷ்ணகிரி வட்டச் சாலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்களான கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினா் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
அப்போது, மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், நகரச் செயலாளா் கேசவன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.