ஊத்தங்கரை பாஜக சாா்பில் ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாயுடு மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடக்கு ஒன்றியத் தலைவா் சிங்காரவேலன், தெற்கு ஒன்றியத் தலைவா் சங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாநில பொதுக்குழு உறுப்பினா் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளா் சி.கே.சங்கா், மாவட்டச் செயலாளா்கள் ஏ.வி. சரவணன், நமசிவாயம் ஆகியோா் கலந்து கொண்டு கட்சியின் வளா்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
இதில் பாஜக ஒன்றிய நகர சக்தி கேந்திர பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா். இறுதியாக பொதுச் செயலாளா் ஜி.வெங்கடேசன் நன்றி கூறினாா்.