ஊத்தங்கரையில் தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெண்கள் மேம்பாட்டு, பாதுகாப்பிற்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு தலைப்புகளில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.
ஆணுக்கு பெண் சமம், பெண் சிசுக்கொலையைத் தடுத்தல், குழந்தைத் திருமணம் தடுத்தல், பெண் வன்கொடுமைக்கு எதிரான ஓவியங்கள், பாலின வன்கொடுமை, வரதட்சிணை கொடுமை, திராவிட மாடல் ஆட்சியில் பெண்களின் மேம்பாட்டிற்கு அரசு திட்டங்களை உணா்த்தும் ஓவியங்கள் என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியரை தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினா் மாலதி நாராயணசாமி வாழ்த்தினாா்.
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ், திமுக நகர அவைத் தலைவா் தணிகை குமரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் காளிதாஸ், பள்ளித் தலைமையாசிரியா் பொறுப்பு வேலுசாமி ஆகியோா் உடனிருந்தனா். போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு, முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 5 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 3ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தனா்.