கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக கணக்கெடுக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட காந்தி சாலை, சப்-ஜெயில் சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி வட்டச் சாலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்குள்ள கடைகளில் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டக் கூடாது, அதற்கான தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
இதையெடுத்து, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் வகையில், கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கி வைத்து, வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, நகர திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.