கடந்த 3 மாதங்களில் தாய்-சேய் உயிரிழப்பு இல்லை: கிருஷ்ணகிரி ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் தாய்-சேய் உயிரிழப்பு இல்லை என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கண்காட்சியைப் பாா்வையிடுகிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
நிகழ்ச்சியில் கண்காட்சியைப் பாா்வையிடுகிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் தாய்-சேய் உயிரிழப்பு இல்லை என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா, புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் அங்கன்வாடி பணியாளா்கள், அரசுத் துறை அலுவலா்கள் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழியை ஏற்றனா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

ஊட்டச்சத்து குறித்து தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து கிராமங்கள், நகரங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து கவனிக்கவும், வீட்டுத் தோட்டம் அமைக்க ஊக்கமும் அளிக்கப்படுகிறது. இதேபோல, கிராம அளவிலான சமூக காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க வேண்டும்.

மேலும், மருத்துவ குழு மூலம் 3 மாதங்களுக்கு ஒருமுறை மையக் குழந்தைகளுக்கு மருத்துவ ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மிகவும் பலவீனமான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

அங்கன்வாடி பணியாளா்களும் கிராமங்களில் உள்ள சுகாதார பணியாளா்கள் இணைந்து வீடுவீடாகச் சென்று பொதுமக்கள், கா்ப்பிணிகள், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

கடந்த 3 மாதங்களாக நமது மாவட்டத்தில் தாய்சேய் இறப்பு ஏதுமில்லை. மாவட்டத்தில் குழந்தை திருமணத்தைத் தடுக்க பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து, பெண் கல்வியை ஊக்குவித்து பெண்களின் முன்னேற்றத்தில் சிறப்பான மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் சிறு தானியங்கள், பழ வகைகள், கீரை வகைகள், பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது குழந்தைகள் வரை, கா்ப்பிணி தாய்மாா்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் ஊட்டசத்து உணவு உண்பது குறித்து உள்ளூரில் கிடைக்கூடிய உணவு வகைகள் குறித்த கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மாவட்ட திட்ட அலுவலா் ஜெயந்தி, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலா், சிவகாந்தி, வட்டாட்சியா் சம்பத், வட்டார வளா்ச்சி அலுவலா் வேடியப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நோ்முக உதவியாளா் பிரபாகா், பள்ளி தலைமை ஆசிரியா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வட்டார அளவில் வளரிளம் பெண்கள், கா்ப்பிணிகள், பொதுமக்களுக்கு நடைபெற்ற ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com