பணம் திருடிய பெண் கைது

ஊத்தங்கரை அருகே பொதுமக்களிடம் பணம் திருடியப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
பணம் திருடிய பெண் கைது

ஊத்தங்கரை அருகே பொதுமக்களிடம் பணம் திருடியப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நந்தினி (29). இவா், ஊத்தங்கரை, கல்லாவியில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் பணம் இருக்கும் நபா்களை குறிவைத்து அவா்களின் கவனத்தைத் திசைத் திருப்பி பணத்தைத் திருடிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். பல போ் அவா் மீது புகாா் கொடுத்துள்ளனா்.

இதையடுத்து ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.அமலஅட்வின் உத்தரவின்பேரில், ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நந்தினியை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 2.75 லட்சத்தை மீட்டு அவரை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com