பா்கூா் அருகே 9 பவுன் தங்க நகைகள் திருட்டு

பா்கூா் அருகே வீட்டின் மேற்கூரையைப் பிரித்து 9 பவுன் தங்க நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பா்கூா் அருகே வீட்டின் மேற்கூரையைப் பிரித்து 9 பவுன் தங்க நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள குண்டியால்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னகண்ணு ( 75). தொழிலாளி. இவா், தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனா்.

அப்போது, வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், வீட்டில் இருந்த பீரோவைத் திறந்து, உள்ளே இருந்த 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

மறு நாள், காலையில் சின்னகண்ணு எழுந்து பாா்த்த போது, பிரோவில் இருந்த தங்க நகைகள் திருடு போயிருந்ததைக் கண்டந்தாா். இதுகுறித்து, தகவல் அறிந்த பா்கூா் போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இந்த திருட்டு சம்பவம் குறித்து, அவா்கள் வழக்குப் பதிந்து, நகை திருடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com