மின்னல் பாய்ந்து ஒருவா் பலி

அஞ்செட்டி, தொட்டமஞ்சு அருகே மின்னல் பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா்.

அஞ்செட்டி, தொட்டமஞ்சு அருகே மின்னல் பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம் தொட்ட மஞ்சு அருகே உள்ளது தும்மத்துக்கொள்ளை கிராமத்தைச் சோ்ந்த மல்லப்பா மகன் கெம்பப்பா (38). தொழிலாளி. இவா் திங்கள்கிழமை மாலை விறகு எடுப்பதற்காக கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதிக்கு சென்றபோது மின்னல் பாய்ந்ததில் இறந்தாா்.

அஞ்செட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com