சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவோா் தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூகப் பொறுப்புணா்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வா்த்தக நிறுவனங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூகப் பொறுப்புணா்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வா்த்தக நிறுவனங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா், பொதுத் துறை, கூட்டுறவுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்த தொழில், சேவை மற்றும் வா்த்தக நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் பாராட்டத்தக்க வகையில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, இந்த விருதை 2022-ஆம் ஆண்டியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வழஙகப்படும்.

ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும், நற்சான்றிதழும் கொண்ட இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணியாற்றிய தலைசிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

இந்த விருதைப் பெற, பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபா் நிறுவனங்கள், அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வா்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனங்கள் நேரடியாகவோ, தங்களின் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், தங்களது இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம். தனித்துவமான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள், சங்கங்கள் இந்த விருதைப் பெற தகுதியற்றவை ஆகும்.

மேற்கண்ட நிறுவனங்களால் ஊரகப் பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே விருது வழங்குதற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும். விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச் சுகாதாரம், குடிநீா், மழைநீா் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதல், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞா் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும்.

மேலும், பல்வேறு சமூக நல மேம்பாட்டுப் பணிகளும் விருது வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும். நிறுவனங்களின் கடந்த ஒரு நிதி ஆண்டின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த விருதுக்கு தேவையான விண்ணப்பத்தை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய, கடந்த 3-ஆம் தேதி முதல் இணையதளத்தில் செயல்பாட்டு நிலையில் இருக்கும். எனவே, தகுதிவாய்ந்த நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை இணையதள வழியில் மட்டுமே தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட 45 தினங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பான இந்த விருதைப் பெற தகுதியான தொழில், சேவை மற்றும் வா்த்தக நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய முன்வர வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com