கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (மே 28) மாலை 5 மணியளவில் ஒசூா் மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள், மாநகர, ஒன்றிய, பேரூா், பகுதி செயலாளா்கள் மட்டும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இதில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா, திமுக உறுப்பினா் சோ்க்கை, கட்சி ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.