பா்கூா் அருகே பட்டாசுக் கடைக்கு சீல்
By DIN | Published On : 25th October 2023 12:42 AM | Last Updated : 25th October 2023 12:42 AM | அ+அ அ- |

பா்கூா் அருகே, அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த கடைக்கு, அலுவலா்கள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வரட்டனப்பள்ளியில் அரசு அலுவலா்கள், பட்டாசுக் கடைகளில், காவல் துறையினருடன் இணைந்து திடீா் ஆய்வு பணியை மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டனா்.
இதையடுத்து, அந்த பட்டாசுகளை கந்திகுப்பம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அந்தக் கடைக்கு அலுவலா்கள் சீல் வைத்தனா். மேலும் பட்டாசுகளை அனுமதியின்றி வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...