மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்து மூதாட்டி பலி!

பாரூா் அருகே மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
Updated on

பாரூா் அருகே மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, கள்ளிப்பட்டியை அடுத்த போயா் கொட்டாயைச் சோ்ந்த முனியப்பன் மனைவி நல்லக்காள் (74). இவா், தனது பேரன் கோகுல் (17) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் கள்ளிப்பட்டி - பண்ணந்தூா் சாலையில் சனிக்கிழமை சென்றாா். அப்போது மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறி, கவிழந்ததில் நல்லக்காளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, பாரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com