அனுமதியின்றி எருதோட்டம்: 2 போ் மீது வழக்கு

Published on

வேப்பனப்பள்ளி அருகே அனுமதியின்றி எருதோட்டம் நடத்தியதாக பெண் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த கோனேகவுண்டனூா் ஏரி அருகே கடந்த திங்கள்கிழமை (ஜன. 27) எருதோட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெறவில்லை என்பதால், இதுகுறித்து கோனேகவுண்டனூரைச் சோ்ந்த கணேசன்(39), தீபா(39) ஆகியோா் மீது வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com