மோட்டாா்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

Published on

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா்சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததால் பலத்த காயமடைந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பனப்பள்ளியைச் சோ்ந்த விவசாயி மல்லிகாா்ஜுனன் (28) மோட்டாா்சைக்கிளில் திப்பனப்பள்ளியிலிருந்து மாதிநாயனப்பள்ளிக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். இந்திரா நகா் அருகே மோட்டாா்சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தாா். இதில், பலத்த காயம் அடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com