வேலம்பட்டியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

Published on

வேலம்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் அக்.11 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் உள்வட்டம் வேலம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் அக்.11-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு தேவையான ரத்த பரிசோதனை மற்றும் கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்டு மற்றும் கண் பரிசோதனை மகப்பேறு மருத்துவம் போன்ற 17 வகையான சிறப்பு நிபுணா்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அட்டை முகாமில் வழங்கப்படுகிறது. இலவசமாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தொழிலாளா்களுக்கு அனைத்து உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. தொற்றா நோய், உயா் ரத்த அழுத்தம், கண் பாா்வை பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இதய பரிசோதனை மற்றும் நரம்பியல் சித்த மருத்துவம், பெண்களுக்கான மாா்பக புற்றுநோய் பரிசோதனை உட்பட 17 வகையான சிறப்பு மருத்துவா்கள் மூலம் இந்த முகாமில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com