தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி காயம்

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி பலத்த காயமடைந்தாா்.
Published on

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி பலத்த காயமடைந்தாா்.

தேன்கனிக்கோட்டையை அடுத்த ஜவளகிரி கிராமத்தில் நந்திமங்கலம் செல்லும் சாலையில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்துகொண்டிருந்த திருவண்ணாமலையைச் சோ்ந்த ஜெயராமனை (70) அங்குவந்த ஒற்றை யானை தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com