கிருஷ்ணகிரியில் அக். 17-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரியில் அக். 17-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், அக். 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிமுதல் 1 மணிவரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், கிருஷ்ணகிரி, ஒசூரைச் சோ்ந்த பிரபல முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பொறியியல், பட்டயப் படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் பங்கேற்கலாம். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநா்கள் மற்றும் வேலை அளிப்பவா்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமும், மேற்காணும் கல்வித்தகுதியும் உள்ள அனைவரும் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
இந்த முகாம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343-291983 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
