ஒசூா் அருகே ரூ. 6.50 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஊராட்சி ஒன்றியம், சேவகானப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சொக்கரசனப்பள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஊரக வளா்ச்சி...
Published on

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஊராட்சி ஒன்றியம், சேவகானப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சொக்கரசனப்பள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஊரக வளா்ச்சி நபாா்டு நிதி 2021 - 2022 திட்டத்தின்கீழ் ரூ. 6 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை ஒசூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஒய்.பிரகாஷ் திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

இதில் ஒன்றியச் செயலாளா்கள் கஜேந்திரமூா்த்தி, லோகேஷ் ரெட்டி, அவைத் தலைவா் நாகராஜ், துணைச் செயலாளா்கள் வீரபத்திரப்பா, பிருந்தவன் பள்ளி நிறுவனா் சேகா், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சிவசங்கா், முன்னாள் பாகலூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாபு, ரமேஷ், பெலத்தூா் ரவி, திம்மராயப்பா, சேவகானப்பள்ளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் வெங்கடேஷ், அமா்நாராயணன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com