ஒசூா்: ஒசூரில் இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கோடியூரைச் சோ்ந்தவா் சிங். இவரது மனைவி அலமேலு (55). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 21-ஆம் தேதி காலை ஒசூா் - பெங்களூரு சாலை, அரசனட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அலமேலு மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அலமேலு இறந்தாா்.
இந்த விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
