கொல்லிமலையில் நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
நாமக்கல் முதல் கொல்லிமலை வெண்டலப்பாடி வரை செல்லும் பேருந்து மூலக்கன்னி, பள்ளிக்குழிப்பட்டி, கண்ணமாங்குளம்பட்டி, விளாரிக்காடு, தேவானூர், அசக்காடு, அரப்பளீஸ்வரர்கோயில் வரை வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் பேருந்தை கொல்லிமலை சோழக்கிராய் என்ற இடத்தில் சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் (பொறுப்பு) அ.மாதேஸ்வரி, கிராம மக்கள் பங்கேற்றனர்.