பரமத்தி வேலூர் வெற்றிலை ஏல சந்தையில் கற்பூரி வெற்றிலையின் விலை சரிந்தும், வெள்ளைக்கொடி வெற்றியின் விலை உயர்ந்தும் உள்ளது.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்
ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை (முதியம் மார்) ரூ.2 ஆயிரத்துக்கும் ஏலம் போனது.
புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.1,500-க்கும் ஏலம் போனது.
தண்ணீர் இல்லாததால் கற்பூரி வெற்றிலையின் உற்பத்தி வெகுவாகக் குறைந்தால், வரத்து குறைந்துள்ளதாகவும், தற்போது திருமணம் உள்ளிட்ட விசேஷ காலங்கள் அதிக அளவில் உள்ளதால், அதிக அளவில் பயன்படுத்தக் கூடிய வெள்ளைக்கொடி வெற்றிலை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அதிக அளவில் ஏலத்துக்கு வந்திருந்ததால் வெள்ளைக்கொடி வெற்றிலையின் விலை அதிகரித்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.