மக்கள் பாதை அமைப்பினர் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாமக்கல்லில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாமக்கல்லில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்தை டாக்டர் ராஜவேல் துவக்கி வைத்தார். இதில், மோகனூர் சுப்ரமணியம் கல்லூரி தாளாளர் பழனியாண்டி, பத்திரிகையாளர் சித்திக், டிரினிடி அகாதெமி இயக்குநர் தயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
ஏற்பாடுகளை நம்பிக்கை இல்ல பொறுப்பாளர் கதிர்செல்வன், மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இதில் காவிரி மேலாண்மை வாரியம் அவசியம் குறித்து விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் குறுநாடகங்கள் மூலமாக வலியுறுத்தப்பட்டன. இதில் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தை டாக்டர் சுந்தரம் முடித்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com