விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு உபகரணங்கள் அளிப்பு

பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு ரூ.28.35 லட்சம் மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு ரூ.28.35 லட்சம் மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பட்டு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பட்டுப்புழு வளர்ப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வழங்கினார். இதில், 54 பேருக்கு தலா ரூ.52,500 வீதம் ரூ.28.35 லட்சம் மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
 நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சித் துறையின் திருச்சி மண்டல துணை இயக்குநர் என்.மல்லிகா, உதவி இயக்குநர் பி.முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com