பெண்ணிடம் செல்லிடப்பேசி பறிப்பு: 3 பேர் கைது

நாமக்கல்லில் பெண்ணிடம் செல்லிடப்பேசியை பறித்துச்சென்ற 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

நாமக்கல்லில் பெண்ணிடம் செல்லிடப்பேசியை பறித்துச்சென்ற 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் அருகே உள்ள காமநாயக்கன்பட்டியைச்
சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி வினிதா (24). இவர், வியாழக்கிழமை காலை நாமக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்துக்கு காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வினிதா கையில் வைத்திருந்த செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
பயணிகள் மற்றும் காவல் பணியில் இருந்த போலீஸார் 3 பேரையும் பின் தொடர்ந்து சென்று பிடித்தனர். 3 பேரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில், சிவியாம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல்(22) என்பதும், மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயது நிரம்பிய இளைஞர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் அளித்த தகவலின் பேரில் 4 திருட்டு போன செல்லிடப்பேசிகளை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com