சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதித்ததை எதிர்த்து தேசிய சிந்தனை பேரவை சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் அண்மையில் நடைபெற்றது.
குஞ்சுமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் துர்க்கை வழிபாட்டுக் குழு அமைப்பாளர் யசோதாகோபாலன் முன்னிலை வகித்தார். 50 வயதுக்கு மேல் சபரிமலை ஏறி ஐயப்பனை தரிசிப்போம் என்றும், அதற்காக காத்திருப்போம் என்று ஐயப்பன் உருவப் படத்தை வணங்கி அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் சுவாமி ஐயப்பனுக்கு மலர்கள் சாற்றி வழிபட்டனர்.