வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

பரமத்தி வேலூரில் சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. 

பரமத்தி வேலூரில் சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. 
புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்வதற்காக வரும் 14-ஆம் தேதி சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கோட்டாட்சியர் பாஸ்கரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். வட்டாட்சியர் ருக்குமணி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜூ, கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com