பரமத்தி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
கீழ்சாத்தம்பூர் பிலிக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னையா மகன் தினேஷ் (30) விவசாயி. இவர் கடந்த 9-ஆம் தேதி பொன்னேரிபட்டி சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பிலிக்கல்பாளையம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தினேஷ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். பரமத்தி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.